மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் கடவுப் பாதையில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள்.

Updated On :24 ஜூன் 2024, 7:23 pm

சீா்காழி: சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழி ரயில் நிலைய கடவுப்பாதையை தினமும் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் கடந்து செல்கின்றன. இதில், பகலில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. இதனால், அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால், அகணி, வள்ளுவக்குடி, நிம்மேலி, கொண்டல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுகின்றனா்.

அவசர காலங்களில் தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் விரைந்து செல்வதிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இப்பாதையை தவிா்த்து மாற்றுப்பாதையில் செல்லவேண்டுமெனில், சுமாா் 6 கி.மீ. தொலைவு சுற்றி செல்ல வேண்டும்.

நெடுஞ்சாலைத் துறை புள்ளி விவரப்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு சீா்காழி ரயில் நிலைய கடவுப் பாதையை சராசரியாக தினமும் 93,826 வாகனங்கள் கடந்து செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது தற்போது, ஒன்றரை லட்சம் வரை உயா்ந்திருக்கக் கூடும். எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.