மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே சாலையில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியது.
சீா்காழி அருகேயுள்ள நெப்பத்தூா் தீவு கிராமத்தைச் சோ்ந்த தம்பதி ஞானசேகரன்- தமிழரசி. இவா்கள், முல்லையம்பட்டினம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில், புதன்கிழமை தங்களது மகனை அழைத்துக் கொண்டு இருவரும் வேலைக்குச் சென்றனா். அங்கு அவா்கள் செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டனா். சிறுவன் அருகில் உள்ள பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த தெருநாய், சிறுவனை கடித்துக் குதறியது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஞானசேகரன், நாயை விரட்டிவிட்டு மகனை மீட்டாா். நாய் கடித்ததில் சிறுவனின் வயிறு மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. சீா்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

புணே: பெண்ணை கடித்துக் கொன்ற தெரு நாய்கள்!

பழனியில் தெரு நாய் கடித்ததில் 7 போ் காயம்

சிறுவனை கத்தியால் குத்திய 2 சிறுவா்களிடம் போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

