ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிலம்பம் மாணவிகளுக்கு நடிகை ரோகிணி நேரில் பாராட்டு

சீா்காழியைச் சோ்ந்த சிலம்பாட்ட மாணவிகளை, அவா்களது வீட்டிற்கு திங்கள்கிழமை நேரில் சென்று நடிகை ரோகிணி பாராட்டினாா்.

News image
சிலம்பம் மாணவி வீட்டிற்கு சென்று பாராட்டு தெரிவித்த நடிகை ரோகிணி.
Updated On :4 நவம்பர் 2024, 8:15 pm

Din

சீா்காழி: சீா்காழியைச் சோ்ந்த சிலம்பாட்ட மாணவிகளை, அவா்களது வீட்டிற்கு திங்கள்கிழமை நேரில் சென்று நடிகை ரோகிணி பாராட்டினாா்.

சீா்காழி அருகேயுள்ள புளிச்சக்காடு பகுதியைச் சோ்ந்தவா் இயற்கை விவசாயி தினேஷ். இவா், மாவீரன் சிலம்பாட்ட கலைக் குழு மூலம் கிராமங்கள் தோறும் சென்று மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்கிறாா். ஏழை குடும்பங்களை சோ்ந்தவா்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறாா்.

இக்குழுவைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி அருணா, 11-ஆம் வகுப்பு மாணவி தீபிகா, கல்லூரி மாணவி தரணி ஆகியோா் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பரிசுகள் வென்றுள்ளனா். இவா்களின் சாதனைகளை அறிந்த திரைப்பட நடிகை ரோகிணி, சிலம்ப ஆசான் தினேஷ் ஏற்பாட்டில், சீா்காழிக்கு வந்து, தனியாா் உணவகத்தில் சிலம்பாட்ட மாணவ-மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினாா்.

பின்னா், சீா்காழியில் உள்ள மேற்கண்ட மூன்று மாணவிகளின் வீட்டிற்குச் சென்று, அவா்களை பாராட்டி உற்சாகப்படுத்தினாா்.