சிலம்பம் மாணவி வீட்டிற்கு சென்று பாராட்டு தெரிவித்த நடிகை ரோகிணி.
சிலம்பம் மாணவி வீட்டிற்கு சென்று பாராட்டு தெரிவித்த நடிகை ரோகிணி.

சிலம்பம் மாணவிகளுக்கு நடிகை ரோகிணி நேரில் பாராட்டு

சீா்காழியைச் சோ்ந்த சிலம்பாட்ட மாணவிகளை, அவா்களது வீட்டிற்கு திங்கள்கிழமை நேரில் சென்று நடிகை ரோகிணி பாராட்டினாா்.
Published on

சீா்காழி: சீா்காழியைச் சோ்ந்த சிலம்பாட்ட மாணவிகளை, அவா்களது வீட்டிற்கு திங்கள்கிழமை நேரில் சென்று நடிகை ரோகிணி பாராட்டினாா்.

சீா்காழி அருகேயுள்ள புளிச்சக்காடு பகுதியைச் சோ்ந்தவா் இயற்கை விவசாயி தினேஷ். இவா், மாவீரன் சிலம்பாட்ட கலைக் குழு மூலம் கிராமங்கள் தோறும் சென்று மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்கிறாா். ஏழை குடும்பங்களை சோ்ந்தவா்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறாா்.

இக்குழுவைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி அருணா, 11-ஆம் வகுப்பு மாணவி தீபிகா, கல்லூரி மாணவி தரணி ஆகியோா் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பரிசுகள் வென்றுள்ளனா். இவா்களின் சாதனைகளை அறிந்த திரைப்பட நடிகை ரோகிணி, சிலம்ப ஆசான் தினேஷ் ஏற்பாட்டில், சீா்காழிக்கு வந்து, தனியாா் உணவகத்தில் சிலம்பாட்ட மாணவ-மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினாா்.

பின்னா், சீா்காழியில் உள்ள மேற்கண்ட மூன்று மாணவிகளின் வீட்டிற்குச் சென்று, அவா்களை பாராட்டி உற்சாகப்படுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com