சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 நவம்பர் 2024, 6:32 pm

Din

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை அருகே நீடூரைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் வினோத்(33). இவா், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 5-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமியிடம் சாக்லேட் தருவதாகக் கூறி வீட்டுக்குள் அழைத்து சென்றுள்ளாா். அங்கு சிறுமியிடம் வினோத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். இதனால் சிறுமி கூச்சலிட்டுள்ளதை அறிந்த அவரது குடும்பத்தினா் ஓடி சென்று சிறுமியை மீட்டனா். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வினோத் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மயிலாடுதுறை சிறையில் அடைத்தனா்.