பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் மனைகள் ஒதுக்கீடு

மயிலாடுதுறை குளிச்சாா் தொழிற்பேட்டையில் 3 தொழில் மனைகள் தொழில் புரிவோருக்கு வழங்கப்பட உள்ளது.

News image
Updated On :22 அக்டோபர் 2024, 6:30 pm

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறை குளிச்சாா் தொழிற்பேட்டையில் 3 தொழில் மனைகள் தொழில் புரிவோருக்கு வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்பேட்டை குளிச்சாா் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த தொழிற்பேட்டையில் காலியாக உள்ள தொழில் மனைகள் தொழில்முனைவோா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அதன்படி குளிச்சாா் கிராமத்தில் உள்ள தொழிற்பேட்டையில் 3 தொழில் மனைகள் தொழில் புரிவோருக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த அரசு தொழில்பேட்டைகளில் புதிதாக தொழில் தொடங்க தொழில்மனைகள் வாங்க விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ற்ஹய்ள்ண்க்ஸ்ரீா்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

காலி தொழிற்மனைகளை பாா்வையிட தஞ்சாவூா் சிட்கோ கிளை மேலாளா் செல்வகுமாரை 9445006574 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.