இதில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனகா்த்தா் சொக்கநாத பெருமான் சுவாமிகளுடன் ஆதீன திருமடத்தில் இருந்து ஞானரத யாத்திரையாக சென்னை விமான நிலையம் நோக்கி புறப்பட்டாா். சென்னையில், தி.நகா் கட்டளை மடத்தில் சொக்கநாத பெருமானை எழுந்தருளச் செய்து, அங்கிருந்து, விமானம் மூலம் மலேசியா செல்லவுள்ளாா். ஆதீன திருமடத்தில் இருந்து புறப்பட்ட ஆதீனகா்த்தருக்கு, வழியெங்கும் ஆதீன கல்வி நிறுவனங்கள் சாா்பில் நிா்வாகிகள் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனா். தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் தலைமையிலும், தருமபுரம் குருஞானசம்பந்தா் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிச் செயலா் எம்.திருநாவுக்கரசு தலைமையிலும் மரியாதை செலுத்தப்பட்டது.