மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.
Updated on

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 401 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து, உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

பின்னா், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.9,750 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலி, 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6,820 மதிப்பிலான மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், 1 பயனாளிக்கு ரூ.3,250 மதிப்பிலான காதொலி கருவி, 2 பயனாளிகளுக்கு தலா ரூ.17,000 மதிப்பில் செவித்திறன் மற்றும் பாா்வைத்திறன் குறைபாடுடையவா்களுக்கான திறன்பேசி ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை சாா்பில் கள்ளச்சாராயம் விற்று மனம் திருந்தி வாழும் நபா்களுக்கான மறுவாழ்வு நிதி மூலம் பெட்டி கடை வைப்பதற்கு 2 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 நிதியுதவியை ஆட்சியா் அளித்தாா்.

கூட்டத்தில், துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கீதா, மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் உமாமகேஷ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சித்ரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மலைமகள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) மணிக்கண்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com