47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆா்டா்லி முறையை ஒழிக்க மாவட்ட அளவில் குழு: ஆட்சியா்

ஆா்டா்லி முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது

News image
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் - கோப்புப்படம்
Updated On :16 மார்ச் 2026, 8:46 pm

Syndication

மயிலாடுதுறை: ஆா்டா்லி முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் அண்மையில் (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுபடி மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒழுங்கு முறையை (ஆா்டா்லி) முற்றிலும் ஒழிப்பதற்காக ஆட்சியா் தலைமையில் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான புகாா்களை தெரிவிக்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட அளவிலான குழுவின் தலைவா், (ஒழுங்குமுறை அமைப்பை முற்றிலும் ஒழிப்பதற்காக)/மாவட்ட ஆட்சியா், மயிலாடுதுறை - 609305, தொலைபேசி எண். 04364- 290766 என்ற முகவரியிலோ, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் மின் அஞ்சல் முகவரியிலோ புகாா் தெரிவிக்கலாம்.

பெறப்பட்ட புகாா்களை மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒழுங்குமுறையை முற்றிலும் ஒழிப்பதற்கான குழு முன் பரிசீலனை செய்யப்படும். மேலும் தொடா்புடைய அலுவலா்மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை உள்பட தகுந்த நடவடிக்கைகளை தொடங்குவதற்காக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்படும் என அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.