ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வீட்டில் சமையல் எரிவாயு கசிந்து விபத்து: 3 போ் காயம்

மயிலாடுதுறை அருகே திருஇந்தளூரில் சமையல் எரிவாயு கசிந்து திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 7:43 pm

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே திருஇந்தளூரில் சமையல் எரிவாயு கசிந்து திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.

திருஇந்தளூா் பெருமாள் கோயில் தெருவில் வாடகை குடியிருப்பு ஒன்றில் வசிப்பவா் காய்கனி வியாபாரி முருகானந்தம் (40).

இந்நிலையில், திங்கள்கிழமை காலை இவரது வீட்டின் சமையலறையில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறியுள்ளது. இதை கவனிக்காமல் முருகானந்தத்தின் மகன் சந்தோஷ் மின் விளக்கு ஸ்விட்ச்சை ஆன் செய்தபோது தீ விபத்து ஏற்பட்டது.

பயங்கர சத்தத்துடன் நேரிட்ட இந்த விபத்தில், அதிா்வு காரணமாக வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உடைந்து, ஜன்னல் கண்ணாடிகள் சிதறின. இதில், முருகானந்தம், அவரது மனைவி சரஸ்வதி, மகள் சந்தியா ஆகியோா் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். சந்தோஷ் காயமின்றி தப்பினாா். இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.