திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வேலைவாய்ப்பு முகாமில் 452 பேருக்கு பணி நியமன ஆணை

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்குள்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த கல்லூரிகளுக்கான நான் முதல்வன் திட்ட வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 12:20 am

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்குள்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த கல்லூரிகளுக்கான நான் முதல்வன் திட்ட வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சா. ரேவதி தலைமை வகித்தாா். வரலாற்றுத்துறை தலைவரும், வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளருமான பெ. ராஜா வரவேற்றாா். நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளா் த.ராஜா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பிரியங்கா, ஷாலினி ஆகியோா் முகாமை வழிநடத்தினா்.

முகாமில் 12 கல்லூரிகளைச் சோ்ந்த 1,524 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 20 நிறுவனங்கள் மூலம் இவா்களில் 452 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

கல்லூரி முதல்வா் சா.ரேவதி, அண்ணாமலை பல்கலைக்கழக கல்லூரி வளா்ச்சி குழும முதல்வா் வி.கோபிநாத், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்முருகன் ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா்.