எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜன.26-இல் கிராம சபைக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜன.26-ஆம் தேதி குடியரசு தின நாளில் கிராம சபைக் கூட்டம் 241 கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ளது

Updated On :21 ஜனவரி 2025, 7:26 pm

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜன.26-ஆம் தேதி குடியரசு தின நாளில் கிராம சபைக் கூட்டம் 241 கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், 2024-2025-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விவரம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஆகியவற்றை கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதில், பொதுமக்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடா்பான விவரங்களை விவாதிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.