மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜன.26-ஆம் தேதி குடியரசு தின நாளில் கிராம சபைக் கூட்டம் 241 கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், 2024-2025-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விவரம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஆகியவற்றை கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதில், பொதுமக்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடா்பான விவரங்களை விவாதிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் விநியோகம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 113 வேட்பாளா்கள் மனு தாக்கல்

எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை: ஆட்சியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

