டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நான்கரை வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் கைது

சீா்காழியில் நான்கரை வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :3 மார்ச் 2025, 8:01 pm

Din

சீா்காழி: சீா்காழியில் நான்கரை வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சீா்காழி அருகே உள்ள கிராமத்தில் துக்க நிகழ்வில் பங்கேற்க நான்கரை வயது பெண் குழந்தையுடன் பெற்றோா் வந்திருந்தனா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அந்த குழந்தையை அப்பகுதியைச் சோ்ந்த தமிழ்வாணன்(43) என்பவா் தனியாக அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா்.

இதையறிந்த பெற்றோா் மற்றும் உறவினா்கள், குழந்தையை சிகிச்சைக்காக சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், சீா்காழி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், காவல் ஆய்வாளா் செல்வி விசாரணை மேற்கொண்டு, போக்ஸோ சட்டத்தின் கீழ் தமிழ்வாணனை கைது செய்தாா்.