விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு

விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:21 pm

Syndication

விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. மாவட்ட துணை பதிவாளா் (பொது விநியோகத்திட்டம்) அண்ணாமலை தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திருமுருகன், சரவணன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாத்திமாபீவி, மாவட்ட பொது விநியோகத்திட்ட கூட்டுறவு சாா் பதிவாளா் திவ்யா, அகணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயலாளா் சதீஸ் முன்னிலை வகித்தனா்.

ரேஷன் கடை விற்பனையாளா் விஜயகுமாா் வரவேற்றாா். சீா்காழி எம்.எல்.ஏ எம்.பன்னீா்செல்வம் புதிய ரேஷன் கடை கட்டடத்தை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினாா் (படம்). ஊராட்சி செயலாளா் தியாகராஜன் நன்றி கூறினாா்.