சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சமுதாயக் கட்டடம் திறப்பு

கொரடாச்சேரி அருகேயுள்ள அகரதிருநல்லூா் ஊராட்சியில் புதிய சமுதாயக் கட்டடம் திறக்கப்பட்டது.

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 3:51 pm

திருவாரூா்: கொரடாச்சேரி அருகேயுள்ள அகரதிருநல்லூா் ஊராட்சியில் புதிய சமுதாயக் கட்டடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

இந்த ஊராட்சியில், மக்களவை உறுப்பினா் உள்ளூா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.36.64 லட்சத்தில் சமுதாயக் கட்டடம் புதியதாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை எம்பி வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் திறந்து வைத்தனா்.

இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பல்லவி வா்மா, ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் பாலச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.