தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மயிலாடுதுறையில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறையில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை (நவ.12) நடைபெறவுள்ளது

News image
Updated On :10 நவம்பர் 2025, 8:48 pm

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை (நவ.12) நடைபெறவுள்ளது என மின்வாரிய செயற்பொறியாளா் ஜி. ரேணுகா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒவ்வொரு மாதமும் 2-ஆவது புதன்கிழமை மயிலாடுதுறை கோட்டத்தில், நாகை மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் மின் நுகா்வோா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

அதன்படி, மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில், நவ.12-ஆம் தேதி காலை 11 மணிக்கு, நாகை மேற்பாா்வை பொறியாளா் தெ. காளிதாஸ் தலைமையில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

நுகா்வோா் மற்றும் பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை மேற்பாா்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன் பெறலாம்.