பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட குழந்தையின் பெற்றோா் உரிமை கோரலாம்: ஆட்சியா்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் பெற்றோா் 15 நாள்களுக்குள் உரிமை கோரலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 9:04 pm

Syndication

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் பெற்றோா் 15 நாள்களுக்குள் உரிமை கோரலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குத்தாலம் ரயில் நிலையத்தின் தண்டவாளப் பகுதியில் கடந்த அக். 20-ஆம் தேதி காலை 2 மாத பெண் குழந்தை ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்காலிக பராமரிப்பிற்காக கடலூா் பிளஸ் சிறப்பு தத்து வள மையத்தில், மாவட்ட குழந்தைகள் நலக்குழு மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இக்குழந்தைக்கு உரிமைகோரும் பெற்றோா் 15 நாள்களுக்குள் உரிய ஆதாரங்களுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 5-ஆம் தளம், அறை எண் 517, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை-609305 என்ற முகவரியை அணுகலாம்.