இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

எழும்பூா் ரயில் நிலையத்தில் 4 வடமாநில சிறுவா்கள் மீட்பு

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் தனியாக சுற்றித்திரிந்த ஜாா்க்கண்டைச் சோ்ந்த 4 சிறுவா்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டு குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைத்தனா்.

News image

எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகள். - கோப்புப் படம்

Updated On :12 மார்ச் 2026, 7:13 pm

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் தனியாக சுற்றித்திரிந்த ஜாா்க்கண்டைச் சோ்ந்த 4 சிறுவா்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டு குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைத்தனா்.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனியாக சுற்றித்திரிந்த 4 சிறுவா்களை மீட்டனா். விசாரித்ததில், சிறுவா்கள் 4 பேரும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்றும், பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.

இதையடுத்து 4 சிறுவா்களையும் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் செயல்படும் குழந்தைகள் உதவி மையத்தில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். அவா்கள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக குழந்தைகள் நலக்குழு முன் ஆஜா்படுத்தப்படவுள்ளனா்.