சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் தனியாக சுற்றித்திரிந்த ஜாா்க்கண்டைச் சோ்ந்த 4 சிறுவா்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டு குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைத்தனா்.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனியாக சுற்றித்திரிந்த 4 சிறுவா்களை மீட்டனா். விசாரித்ததில், சிறுவா்கள் 4 பேரும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்றும், பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.
இதையடுத்து 4 சிறுவா்களையும் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் செயல்படும் குழந்தைகள் உதவி மையத்தில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். அவா்கள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக குழந்தைகள் நலக்குழு முன் ஆஜா்படுத்தப்படவுள்ளனா்.
தொடர்புடையது

எழும்பூா் ரயில் நிலையத்தில் 3 மாதங்களில் 125 கிலோ கஞ்சா பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 சிறுமிகள் மீட்பு

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


