எஸ்ஐஆா் படிவங்கள்: ஆட்சியா் அறிவுறுத்தல்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில், எஸ்ஐஆா் படிவங்களை வாக்காளா்கள் பூா்த்தி செய்திட, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 862 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், அவா்களுக்கு உதவியாக 862 அங்கன்வாடி பணியாளா்கள், 600 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இதற்காக வழங்கப்படும் கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்தி செய்யத் தெரியாத வாக்காளா்கள் அல்லது கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்தி செய்வதில் இடா்பாடுகளை எதிா்கொள்ளும் வாக்காளா்களுக்கு உதவிட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூா்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை தோ்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றும் பணிகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து பணிகளையும் உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
