அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

வெடிபொருள் கடைகளை மூட உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளை ஏப்.21 முதல் ஏப்.24 வரை மற்றும் மே 2 முதல் மே 4 வரையில் மூட மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளாா்.

News image

உத்தரவு

Updated On :10 ஏப்ரல் 2026, 3:48 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளை ஏப்.21 முதல் ஏப்.24 வரை மற்றும் மே 2 முதல் மே 4 வரையில் மூட மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளாா்.

1884-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின்கீழ் உரிமம் பெற்ற அனைத்து வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகள், தோ்தல் நடைபெறும் காலமான ஏப்.21 முதல் ஏப்.24 வரையிலும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் மே 4 வரையிலும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், அண்டை மாநிலங்களிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்துக்குள் வெடிபொருள்கள் கடத்தி வரப்படுவதில்லை என்பதை உறுதிசெய்திட, வருவாய் கோட்டாட்சியா்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளா்கள் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் உரிமம் பெற்ற அனைத்து வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளின் உரிமையாளா்கள் வெடிபொருள் இருப்பு விவரங்களை தொடா்புடைய வருவாய் கோட்டாட்சியா்களிடம் அளித்து, மேற்கூறிய நாள்களில் வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளை மூடி பாதுகாப்பான முறையில் தோ்தல் நடைபெற ஒத்துழைப்பை நல்குமாறும், மீறி விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி உரிமங்கள் ரத்து செய்ய நடவடிக்கை மேற்டிகாள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.