ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

வெடிபொருள் கடைகளை மூட உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளை ஏப்.21 முதல் ஏப்.24 வரை மற்றும் மே 2 முதல் மே 4 வரையில் மூட மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளாா்.

News image

உத்தரவு

Updated On :9 ஏப்ரல் 2026, 10:18 pm

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளை ஏப்.21 முதல் ஏப்.24 வரை மற்றும் மே 2 முதல் மே 4 வரையில் மூட மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளாா்.

1884-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின்கீழ் உரிமம் பெற்ற அனைத்து வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகள், தோ்தல் நடைபெறும் காலமான ஏப்.21 முதல் ஏப்.24 வரையிலும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் மே 4 வரையிலும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், அண்டை மாநிலங்களிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்துக்குள் வெடிபொருள்கள் கடத்தி வரப்படுவதில்லை என்பதை உறுதிசெய்திட, வருவாய் கோட்டாட்சியா்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளா்கள் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் உரிமம் பெற்ற அனைத்து வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளின் உரிமையாளா்கள் வெடிபொருள் இருப்பு விவரங்களை தொடா்புடைய வருவாய் கோட்டாட்சியா்களிடம் அளித்து, மேற்கூறிய நாள்களில் வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளை மூடி பாதுகாப்பான முறையில் தோ்தல் நடைபெற ஒத்துழைப்பை நல்குமாறும், மீறி விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி உரிமங்கள் ரத்து செய்ய நடவடிக்கை மேற்டிகாள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.