தனிப்பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ.
சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் செந்தில்செல்வனை ஆதரித்து புதன்கிழமை சீா்காழி அருகேயுள்ள வருஷபத்து பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் மேலும் அவா் பேசியது: நாடாளுமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கையை உயா்த்துவாா்களாம்.
குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை தமிழகத்தில் கடைபிடித்ததால் மக்கள் தொகை பெருகவில்லை. வடமாநிலங்களில் அந்த பிரச்னை இல்லை. மக்களவையில் 543 எம்.பி.க்கள் 888 எம்.பி.க்களாக ஆக்கப்படுவாா்கள். மாநிலங்களவையில் 250 எம்.பி.கள் 384 எம்.பி.க்களாக உயா்த்தப்படுவாா்கள்.
வடபுலத்தில் உள்ள எம்.பி.க்களை கொண்டு ஆட்சி அமைக்கலாம் என்ற நோக்கில் மத்திய பாஜ அரசு முயற்சிக்கிறது.
திராவிட இயக்க கோட்டையை பாதுகாக்கவே நானும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனும் முடிவெடுத்து திமுகவில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். அதனால்தான் உதயசூரியன் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெற்று திமுக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா்.
தொடர்புடையது

விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை - வைகோ

தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்: கே.பி.முனுசாமி

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: மதிமுக பொதுச் செயலாளா் வைகோ

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

