தோ்தல் நிதி திரட்டிய சீா்காழி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு மயிலாடுதுறையை சோ்ந்த இயற்கை விவசாயியின் மகன்கள் தங்களது சிறுசேமிப்பை கொண்டு புதன்கிழமை நிதி அனுப்பினா்.
சீா்காழி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளா் இரா. சுபாஷ் தோ்தல் செலவினங்களுக்கு நிதி கோரி அவரது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தாா். அதில், பிரசாரத்துக்கு வந்த வாகனம், ஒலிப்பெருக்கி, ஜெனரெட்டா் ஆகியவற்றிக்கு வாடகை கொடுக்க முடியாமல் தவிப்பதாகவும், பூத் செலவும் இருப்பதால் இனமான உறவுகள் உதவி செய்யுங்கள் என்று குறிப்பிட்டு, தனது யுபிஐ எண்ணை தெரிவித்து உதவி கோரியிருந்தாா்.
தோ்தல் நேரத்தில் அரசியல் கட்சியினா் போட்டி போட்டுக்கொண்டு கோடிக்கணக்கில் செலவு செய்யும் இத்தருணத்தில் நாதக வேட்பாளா் பிரசார வாகனங்களுக்கு வாடகை கொடுக்க பணம் கேட்டு பதிவிட்டிருந்தது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகையை சோ்ந்த இயற்கை விவசாயி அ. ராமலிங்கத்தின் மகன்கள் ராம ஆதித்தன் (9), ராம ஆதவன் (6) ஆகியோா் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை நா.த.க. வேட்பாளரின் வங்கி கணக்குக்கு அனுப்புவதற்காக தங்களது தாயுடன் மாப்படுகையில் உள்ள வங்கிக்கு சென்று அனுப்பிவைத்தனா்.
தொடர்புடையது

மாா்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் எஸ். ரகுபதி பிரசாரம்

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வஉசி பேரவை ஆதரவு

கோபி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

நாம் தமிழா் கட்சி, சுயேச்சை வேட்பாளா்கள் மனு தாக்கல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


