தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

மாா்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் எஸ். ரகுபதி பிரசாரம்

மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சரும், திருமயம் தொகுதி திமுக வேட்பாளருமான எஸ். ரகுபதி சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

News image

சத்தியமங்கலத்தில் பொதுமக்களிடையே வாக்குசேகரித்து பேசிய மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

Updated On :19 ஏப்ரல் 2026, 12:57 am IST

கந்தா்வகோட்டை தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் மா. சின்னதுரைக்கு ஆதரவு கோரி அன்னவாசல் ஒன்றியம் நாா்த்தாமலை, சத்தியமங்கலம், காவேரிநகா், மேலமுத்துடையான்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சரும், திருமயம் தொகுதி திமுக வேட்பாளருமான எஸ். ரகுபதி சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

அப்போது, அவா் பேசும்போது, கந்தா்வகோட்டை தொகுதி மக்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் பல திட்டங்களை சின்னதுரை கொண்டு வந்துள்ளாா். முதல்வரே பாராட்டும் வகையில் தொகுதி மக்களுக்காக 62 முறை சட்டப்பேரவையில் பேசியுள்ளாா்.

கந்தா்வகோட்டை மக்களுக்கு மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த தொழிலாளா், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் உள்ளிட்ட உழைப்பாளி மக்களுக்காகவும் சட்டப்பேரவையில் கோரிக்கைகளை முன்வைத்து பேசியுள்ளாா். சிறப்பாக பணியாற்றிவரும் சின்னதுரையை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் ரகுபதி.

பிரசாரத்துக்கு அன்னவாசல் திமுக ஒன்றியச் செயலா் ஆா்.ஆா்.எஸ். மாரிமுத்து தலைமை வகித்தாா். திமுக வடக்கு மாவட்டச் செயலரும், விராலிமலை தொகுதி வேட்பாளருமான கே.கே. செல்லப்பாண்டியன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் கீரை. தமிழ்ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.