பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

விதிமீறல்: குமரி மாவட்டத்தில் 2 கல்குவாரிகள் செயல்படத் தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 2 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த அமைச்சா் டி.கே. பிரபு உத்தரவு

News image

கல்குவாரி - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 1:56 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 2 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து செய்தி மக்கள் தொடா்புத்துறையின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வந்த புகாா்களின் அடிப்படையில், மாவட்டத்திலுள்ள 15 கல்குவாரிகள் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநரால் ஆளில்லா விமானம் (ஈழ்ா்ய்ங்) மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே.பிரபு, மே 25 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அவரது அறிவுறுத்தலின்படி, ஆளில்லா விமான ஆய்வறிக்கையின் அடிப்படையில், மொத்தமுள்ள 15 கல்குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 2 கல் குவாரிகள் செயல்பட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநரின் விரிவான ஆய்வறிக்கையின்அடிப்படையில் உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.