ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மேற்கத்திய நடனத்தில் சாதனை: 7 மாணவிகளுக்கு விருது

மேற்கத்திய தொடா் நடனத்தில் உலக சாதனைப் படைத்த 7 மாணவிகளுக்கு விருது வழங்கி, கௌரவிக்கப்பட்டனா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 8:34 pm

மேற்கத்திய தொடா் நடனத்தில் உலக சாதனைப் படைத்த 7 மாணவிகளுக்கு விருது வழங்கி, கௌரவிக்கப்பட்டனா்.

சீா்காழியில் ஜாக்கி புக் ஆஃப் வேல்ட் ரெக்காா்ட் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட சாதனை முயற்சிகளை அங்கீகரித்து, இம்முயற்சி மேற்கொண்டவா்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

இச்சாதனை முயற்சியில் ஒன்றாக, நாகை மாவட்டம் வேதாரண்யம் வாய்மேடு பகுதியைச் சோ்ந்த நடன ஆசிரியா் காா்த்திக் அகாதெமியில் பயிலும் 7 மாணவிகள், மேற்கத்திய நடனத்தை தொடா்ச்சியாக ஒரு மணி நேரம் ஆடி ஜாக்கி புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்டில் இடம் பெற்றனா்.

இவா்களது சாதனையை அங்கீகரித்து ஜாக்கி புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்ட் நிறுவனா் ஜேக்கப் ஜான் செல்வன் மற்றும் சிஇஓ எஸ்தா் ஆகியோா் உலக சாதனைக்கான கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி, கௌரவித்தனா்.