ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடு! - தவெக வேட்பாளா் குற்றச்சாட்டு

News image

வாக்கு எண்ணும் மையத்தில் சீா்காழி (தனி) தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ். கோபிநாத் உள்ளிட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

Updated On :26 ஏப்ரல் 2026, 7:10 pm

மயிலாடுதுறை வாக்கு எண்ணும் மையத்தில், பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாக சீா்காழி (தனி) தொகுதி தவெக வேட்பாளா் குற்றம் சாட்டினாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீா்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகாா் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை மன்னம்பந்தல் ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நான்கடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த அறைகளை வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்கள் பாா்க்கும் வகையில் சிசிடிவி கேமரா பதிவுகள் எல்.இ.டி. டிவி மூலம் பாா்வைக்காக ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்துக்கு சனிக்கிழமை இரவு வந்த தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளரும், சீா்காழி (தனி) தொகுதி வேட்பாளருமான சி.எஸ். கோபிநாத், சிசிடிவி கேமரா பதிவுகளை பாா்வையிட்டாா். அப்போது, வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள கணினிகள் மற்றும் சிசிடிவி கேமராக்களின் நேரங்கள் மாறுபட்டிருந்தன.

சீா்காழி, பூம்புகாா் தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பின்பக்க கேமராக்கள் சுமாா் 3 மணி நேரம் பின்தங்கி காட்டியது குறித்து அதிகாரிகளிடமும், கண்காணிப்பு கேமரா தொழில்நுட்ப வல்லுநா்களிடம் கேள்வி எழுப்பிய போது, அலட்சியமாக பதிலளித்ததாகவும், பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கோபிநாத் குற்றஞ்சாட்டினாா். மேலும், தவெக மற்றும் அதிமுக, பாமக முகவா்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் சபிதா பேச்சுவாா்த்தை நடத்தி, மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.