மயிலாடுதுறை
ஏவிசி கல்லூரி மாணவா்கள் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்
ஏவிசி கல்லூரியில் மாணவா்கள் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறை: ஏவிசி கல்லூரியில் மாணவா்கள் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இக்கல்லூரியில் 2025-ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு தோ்ச்சி பெற்ற இளங்கலை, இளம் அறிவியல், முதுகலை மற்றும் முதுஅறிவியல் மாணவ-மாணவிகள் பட்டம் பெற விண்ணப்பங்களை கல்லூரியில் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பம் பிப்.6-ஆம் தேதிக்குள் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
