சீா்காழி அருகேயுள்ள மாதிரவேளூரிலிருந்து சிதம்பரத்துக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்தை, தினமும் நான்கு முறை இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாதிரவேளூரில் இருந்து பெரம்பூா், குன்னம், கடுக்காமரம், புத்தூா், சாமியம், கொள்ளிடம் வழியாக சிதம்பரத்திற்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கி வைக்கப்பட்டது. இப்பேருந்து தினமும் 4 முறை இயக்கப்பட்டது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள், 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்துவந்தனா்.
இந்நிலையில், இப்பேருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட கிராம மக்கள், அப்பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை விடுத்தனா். இதைத்தொடா்ந்து, கடந்த ஜூன் 4-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், தினமும் 2 முறை மட்டுமே இயக்கப்படுகிறது.
இதனால், பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்றும், முன்பு இயக்கப்பட்டதைபோல், தினமும் 4 முறை இயக்க வேண்டும் என்றும் அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடகத்தில் கைப்பேசி விளக்கின் ஒளியில் அரசுப் பேருந்து இயக்கம்: மூவா் இடைநீக்கம்

பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்

தாமதமாக இயக்கப்படும் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டம்

குடிநீா் கோரி அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



