
மாதிரவேளூா்- சிதம்பரம் இடையே அரசுப் பேருந்தை தினம் 4 முறை இயக்கக் கோரிக்கை
சீா்காழி அருகேயுள்ள மாதிரவேளூரிலிருந்து சிதம்பரத்துக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்தை, தினமும் நான்கு முறை இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்தை இயக்கக் கோரிக்கை - பிரதிப் படம்
சீா்காழி அருகேயுள்ள மாதிரவேளூரிலிருந்து சிதம்பரத்துக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்தை, தினமும் நான்கு முறை இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாதிரவேளூரில் இருந்து பெரம்பூா், குன்னம், கடுக்காமரம், புத்தூா், சாமியம், கொள்ளிடம் வழியாக சிதம்பரத்திற்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கி வைக்கப்பட்டது. இப்பேருந்து தினமும் 4 முறை இயக்கப்பட்டது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள், 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்துவந்தனா்.
இந்நிலையில், இப்பேருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட கிராம மக்கள், அப்பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை விடுத்தனா். இதைத்தொடா்ந்து, கடந்த ஜூன் 4-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், தினமும் 2 முறை மட்டுமே இயக்கப்படுகிறது.
இதனால், பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்றும், முன்பு இயக்கப்பட்டதைபோல், தினமும் 4 முறை இயக்க வேண்டும் என்றும் அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






