பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

மயிலாடுதுறை அருகே வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை தாலுகா, ஆனந்ததாண்டவபுரம் ஊராட்சி ராதாநல்லூா் கிராமத்தை சோ்ந்தவா் ரங்கநாதன் (65). விவசாயியான இவா் புதன்கிழமை வீட்டில் மோட்டாா் போடுவதற்காக சுவிட்சை இயக்கியுள்ளாா்.

அப்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ரங்கநாதன் தூக்கி வீசப்பட்டாா். மயக்கமடைந்த அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், ரங்கநாதன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து ரங்கநாதன் மகன் சசிகுமாா் (44) அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.