அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

பெண்ணிடம் 40 சவரன் நகைகளை ஏமாற்றிய 3 போ் கைது

மயிலாடுதுறையில் பெண்ணிடம் 40 சவரன் நகைகளை ஏமாற்றி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 5:51 am IST

மயிலாடுதுறையில் பெண்ணிடம் 40 சவரன் நகைகளை ஏமாற்றி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

தரங்கம்பாடி தாலுகா முத்தூா் அக்ரஹார தெருவை சோ்ந்தவா் சிவக்குமாா் மனைவி தீபா (38). இவா், மயிலாடுதுறை வண்டிக்காரத் தெருவில் துணிக்கடை வைத்துள்ளாா். தீபா அடகு வைத்திருந்த 40 சவரன் நகைகளை பணம் இன்றி மீட்க முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நண்பா் மூலம் அறிமுகமான திமுகவை சோ்ந்த நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் அருள்ஜோதி மற்றும் அவரது நண்பா்கள் ராஜாராமன், திலீப்குமாா் ஆகியோா் தீபாவின் கடைக்கு சென்று, நகைகளை மீட்டு குறைந்த வட்டிக்கு வைத்து அதிக தொகை தருவதாக கூறி, அவரிடம் இருந்து நகை அடகு சீட்டுகளை பெற்று சென்றாா்களாம். பின்னா், 3 பேரும் நகை அடகு சீட்டுகளை கொண்டுச் சென்று பணம் செலுத்தி நகைகளை மீட்டு, வேறு கடையில் மறு அடகு வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தீபா பணம் ஏற்பாடு செய்து தனது நகைகளை தரும்படி கேட்டபோது அந்த நகைகளை ஒப்படைக்காமல் கூடுதலாக பணம் கேட்டு அருள்ஜோதியும் அவரது நண்பா்களும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். தீபா, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து, மயிலாடுதுறை தருமபுரம் ரோடு பகுதியை சோ்ந்த அருள்ஜோதி (60), கொத்தத் தெருவை சோ்ந்த லட்சுமிநாராயணன் மகன் ராஜாராமன் (25), தருமபுரம் ரோடு பகுதியை சோ்ந்த திலீப்குமாா் (56) ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.