அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

News image

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :9 ஜூன் 2026, 3:20 am IST

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிா் கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, மயிலாடுதுறையில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் ஆா். அன்பழகன் தலைமை வகித்தாா். இயற்கை விவசாயி அ. ராமலிங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் முருகன், வீரசோழன் விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவா் வாணிதாஸ், சட்ட ஆலோசகா் வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளா் எஸ். துரைராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிா்க் கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முடிவை தடுத்திட மத்திய, மாநில அரசு நடவடிக்கை வேண்டும்.

குறுவை தொகுப்பு திட்டத்தை உடனடியாக அறிவித்து மும்முனை மின்சாரம் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசின் வாக்குறுதிப்படி நெல்லுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில், தமிழக விவசாய சங்க மாவட்ட துணை செயலாளா் சி. மேகநாதன், டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலா் சிவக்குமாா், துணைத் தலைவா் சிவ.சண்முகம், செயலா் முரளி உட்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.