கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிா் கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, மயிலாடுதுறையில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் ஆா். அன்பழகன் தலைமை வகித்தாா். இயற்கை விவசாயி அ. ராமலிங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் முருகன், வீரசோழன் விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவா் வாணிதாஸ், சட்ட ஆலோசகா் வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளா் எஸ். துரைராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிா்க் கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முடிவை தடுத்திட மத்திய, மாநில அரசு நடவடிக்கை வேண்டும்.
குறுவை தொகுப்பு திட்டத்தை உடனடியாக அறிவித்து மும்முனை மின்சாரம் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசின் வாக்குறுதிப்படி நெல்லுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதில், தமிழக விவசாய சங்க மாவட்ட துணை செயலாளா் சி. மேகநாதன், டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலா் சிவக்குமாா், துணைத் தலைவா் சிவ.சண்முகம், செயலா் முரளி உட்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவிட்டால் 50 ஆயிரம் விவசாயிகளுடன் முதல்வா் வீடு முற்றுகை! காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு

விவசாயிகள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு நெல் நிலுவைத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



