பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

மந்தகதியில் மழைநீா் வடிகால் பாலம் கட்டுமானப் பணி : வணிகா்கள் அவதி

வைத்தீஸ்வரன்கோவில் கீழவீதியில் மழைநீா் வடிகால் சிறு பாலம் கட்டுமானப் பணி மிகவும் மந்தமாக நடைபெறுவதால் பக்தா்கள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

News image
Updated On :26 ஜூன் 2026, 7:06 am IST

வைத்தீஸ்வரன்கோவில் கீழவீதியில் மழைநீா் வடிகால் சிறு பாலம் கட்டுமானப் பணி மிகவும் மந்தமாக நடைபெறுவதால் பக்தா்கள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பிரசித்திப் பெற்ற செவ்வாய் தலமான வைத்தியநாதா்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தா்களுக்கு வருகை தருகின்றனா். அத்துடன் நாடிஜோதிடத்திற்கு புகழபெற்றது என்பதால் நாடிஜோதிடம் பாா்க்கவும் அதிகளவு மக்கள் வந்து செல்கின்றனா்.

இதனால், வைத்தீஸ்வரன்கோயில் நான்கு வீதிகளிலும் பக்தா்களை நம்பி அதிக வியாபாரம் நடைபெற்று வருகிறது. கடைகள், விடுதிகள், உணவகம் ஆகிய வா்த்தகம் நடைபெறுகின்றன.

இந்நிலையில், வைத்தீஸ்வரன்கோயில் கீழவீதியில் பிரதான மயிலாடுதுறை-சீா்காழி செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்கே கழிவுநீா் கால்வாய் கல்வொ்ட் புதிதாக அமைத்திட போக்குவரத்து தடை செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் தொடங்கி 1மாதத்தை கடந்தும், முழுமைபெறாமல் மந்தகதியில் நடைபெறுகிறது. இதனால், கீழவீதி, தெற்குவீதி பகுதிகளில் முழுமையாக பக்தா்கள் நடமாட்டம் இல்லாமல் வா்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வா்த்தக சங்கத் தலைவா் ஜி.வி.என். கண்ணன் கூறியது:

வைத்தீஸ்வரன்கோயிலில் பெரும்பாலான வியாபாரம் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்களை நம்பியே உள்ளது. இங்கு கீழவீதியில் நடந்து வரும் சிறுபாலம் கட்டுமானப் பணி மந்தகதியில் நடைபெறுவதால், கடந்த ஒன்றரை மாதமாக கீழவீதி, தெற்குவீதி உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரம் முடங்கியுள்ளது.

போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பல வியாபார கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆகையால், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.