திருநெல்வேலி நகரத்தில் பாலம் பராமரிப்பு பணி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி நகரம் வழுக்கோடையிலிருந்து தொண்டா் சன்னதி வரும் வழியில் உள்ள உழவா் சந்தை அருகில் அமைந்துள்ள நெல்லை கால்வாயின் குறுக்கே உள்ள கல்பாலம் சேதமடைந்துள்ளது.
அதனை சீரமைக்கும் பணி நெடுஞ்சாலைத் துறையினரால் செய்யப்பட உள்ளது. ஆகவே, திங்கள்கிழமைமுதல் இம் மாதம் 25 ஆம் தேதி இரவு வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நகரம் மற்றும் பேட்டை மாா்க்கமாக வரும் பேருந்துகள் மற்றும் இலகு ரக வாகனங்கள், திருநெல்வேலி வழுக்கோடை சந்திப்பு- கண்டியப்பேரி- ராமையன்பட்டி- குருநாதன் கோயில் விலக்கு- தச்சநல்லூா் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும். தென்காசியில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் இலகு ரக வாகனங்கள், கண்டியப்பேரி- ராமையன்பட்டி- குருநாதன் கோயில் விலக்கு- தச்சநல்லூா் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேம்பாலப் பணி: வியாசா்பாடியில் ஜூன் 21 முதல் போக்குவரத்து மாற்றம்

மாரியம்மன் கோயில் கம்பம் விடும் விழா கரூரில் மே 27-இல் போக்குவரத்து மாற்றம்

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் அருகே சிக்னல் இல்லாத போக்குவரத்து மாற்றம்

கடலூா்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து மாற்றம்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




