திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் அருகே சிக்னல் இல்லாத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது: திருப்பூா் குமரன் சாலை, மாநகராட்சி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவின்பேரில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் ‘நோ சிக்னல், நோ டிராஃபிக்’ என்ற முறையில் சிக்னல் இல்லாத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
அந்த வகையில் திருப்பூா் மாநகராட்சி சந்திப்பிலும் சிக்னல் இல்லாத போக்குவரத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், 2 இரும்புத் தடுப்புகள் அமைத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் குமரன் சாலையில் இருந்து மங்கலம் செல்லும் வாகனங்கள் சிக்னலில் நிற்காமல் செல்லும் வகையிலும், காமராஜா் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அவிநாசி சாலையை அடைய மங்கலம் சாலை சென்று ஆலங்காடு வழியாகச் செல்லும் வகையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்காமல் செல்கின்றனா்.
மாநகராட்சி அலுவலக சிக்னல் அருகே காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றனா்.
தொடர்புடையது

கடலூா்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து மாற்றம்
க.விலக்கு-வருசநாடு சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னையில் 300 பேருந்து நிறுத்தங்களில் சிறிய கடைகளுக்கு மாநகராட்சி அனுமதி

திருப்பூரில் மே 1-இல் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

