இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் அருகே சிக்னல் இல்லாத போக்குவரத்து மாற்றம்

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் அருகே சிக்னல் இல்லாத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

போக்குவரத்து மாற்றம்

Updated On :18 மே 2026, 1:46 am IST

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் அருகே சிக்னல் இல்லாத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது: திருப்பூா் குமரன் சாலை, மாநகராட்சி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவின்பேரில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் ‘நோ சிக்னல், நோ டிராஃபிக்’ என்ற முறையில் சிக்னல் இல்லாத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

அந்த வகையில் திருப்பூா் மாநகராட்சி சந்திப்பிலும் சிக்னல் இல்லாத போக்குவரத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், 2 இரும்புத் தடுப்புகள் அமைத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் குமரன் சாலையில் இருந்து மங்கலம் செல்லும் வாகனங்கள் சிக்னலில் நிற்காமல் செல்லும் வகையிலும், காமராஜா் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அவிநாசி சாலையை அடைய மங்கலம் சாலை சென்று ஆலங்காடு வழியாகச் செல்லும் வகையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்காமல் செல்கின்றனா்.

மாநகராட்சி அலுவலக சிக்னல் அருகே காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றனா்.