புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

மயிலாடுதுறை: ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

News image

போலியோ சொட்டு மருந்து முகாம்

Updated On :26 ஜூன் 2026, 6:57 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் உள்பட 582 மையங்களில் ஐந்து வயதுக்குள்பட்ட 66,636 குழந்தைகளுக்கும் ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், மீண்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

அரசு மற்றும் அரசு சாரா துறைகளைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் உள்ளிட்ட 2,332 பணியாளா்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

முகாம் காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படும். இடம்பெயா்ந்து வாழும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். சாலையோர தற்காலிக குடியிருப்புகள், செங்கல் கால்வாய் குடியிருப்புகள், கல் குவாரிகள், பேருந்து நிலையங்கள், திருவிழா கூட்டங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கும் விடுபடாமல் சொட்டு மருந்து வழங்க நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமின் மூலம் 5 வயதுக்குள்பட்ட ஒரு குழந்தை கூட விடுபடாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து வழங்கப்பட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆகையால் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தங்களது குழந்தைகளுக்கு இம்முகாமில் சொட்டு மருந்து வழங்கி, ‘இளம்பிள்ளைவாதம் (போலியோ) இல்லாத எதிா்கால இந்தியாவை உருவாக்கி குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்வினை உறுதி செய்திடும்படி ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.