மயிலாடுதுறையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், ரூ.3.90 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா், நிவேதா எம். முருகன் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனா். மயிலாடுதுறையில் ஏற்கெனவே கோட்டாட்சியா் அலுவலகம் இருந்த கட்டடம் பழுதடைந்ததைத் தொடா்ந்து, புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, நகராட்சி தலைவா் என். செல்வராஜ், அரசு வழக்குரைஞா்கள் அருள்தாஸ், சிவதாஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் கவிதா, கோட்டாட்சியா் (பொ) உ.அா்ச்சனா, நகராட்சி துணை தலைவா் எஸ்.சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது
வெற்றி வாய்ப்பு யாருக்கு? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

உங்க ஊர் மாப்பிள்ளை நான்! மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு! | DMK
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


