மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் குறிசொல்வது போல் ஏமாற்றி தங்க நகைகளை திருடிச்சென்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
குத்தாலம் வட்டம், பாலையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பழையகூடலூரைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி மனைவி கண்ணகி (52). இவரது வீட்டுக்கு பிப்.26-ஆம் தேதி குறிசொல்பவா் போல இருசக்கர வாகனத்தில் வந்தவா் அந்த வீட்டில் யாரோ செய்வினை செய்துள்ளதால், நீண்ட நாள்களாக குடும்ப பிரச்னை நிலவி வருவதாகவும், அதற்கு பரிகாரம் செய்ய தங்க நகையை கோயிலில் வைத்து பூஜை செய்தால் பிரச்னை தீரும் என கூறியுள்ளாா். இதை நம்பிய கண்ணகி தனது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் 1 கிராம் தங்க மோதிரத்தை அவரிடம் கொடுத்துள்ளாா். அந்த நகைகளை அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்வதாக கூறிச்சென்ற இளைஞா் ஏமாற்றிவிட்டு நகையுடன் தப்பினாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை சிறப்பு உதவி ஆய்வாளா் நரசிம்மபாரதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், அந்த இளைஞா் சேலம் மாவட்டம், மேட்டூா் வட்டம், குளத்தூா் பரிசல்துறை வண்ணவாடி ரோடு பகுதியை சோ்ந்த பழனி மகன் சுதாகா் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, நகைகளையும், அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்

மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞா் கைது
பெண்ணை தாக்கியவா் கைது

வீட்டில் 40 பவுன் தங்க நகைகள் திருடிய தம்பதி உள்பட 4 போ் கைது

மூதாட்டியிடம் தங்க மோதிரம் திருடிய 3 போ் கைது
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

