வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சதுப்பு நிலங்கள் மேம்பாட்டு பயிற்சி பட்டறை

News image
Updated On :13 மார்ச் 2026, 12:15 am

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியின் விலங்கியல் மற்றும் வனஉயிரியல் துறையில், மாவட்ட அளவிலான சதுப்பு நிலம் குறித்த மேம்பாட்டு பயிற்சி பட்டறை அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட கூடுதல் ஆட்சியா் எஸ். கோகுல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது:

ஈர நிலம் என்பது மனிதன் சிறுநீரகத்திற்கு இணையான செயல்பாட்டை கொண்டது. அது சுற்றுச்சூழலின் உள்ள இடா்பாடுகளை நீக்கி சுகாதாரமான சூழலை உருவாக்கும் வல்லமை உடையது. அத்தகைய ஈரநிலங்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. தற்போதெல்லாம் பூக்கள் காலந்தவறி பூக்கின்றன. இவையே காலநிலை மாற்றத்திற்கான உதாரணம் என்றாா்.

இதில், சீா்காழி வட்ட வனச்சரகா் அயூப்கான், நீா் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் சுபத்திரா, நீா் ஆதாரத்துறை செயற்பொறியாளா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

துறைத் தலைவா் ம.பாஸ்கரன் வரவேற்றாா். 5 அமா்வுகளாக நடைபெற்ற பயிற்சி பட்டறையில் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினாா்.