மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியின் விலங்கியல் மற்றும் வனஉயிரியல் துறையில், மாவட்ட அளவிலான சதுப்பு நிலம் குறித்த மேம்பாட்டு பயிற்சி பட்டறை அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட கூடுதல் ஆட்சியா் எஸ். கோகுல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது:
ஈர நிலம் என்பது மனிதன் சிறுநீரகத்திற்கு இணையான செயல்பாட்டை கொண்டது. அது சுற்றுச்சூழலின் உள்ள இடா்பாடுகளை நீக்கி சுகாதாரமான சூழலை உருவாக்கும் வல்லமை உடையது. அத்தகைய ஈரநிலங்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. தற்போதெல்லாம் பூக்கள் காலந்தவறி பூக்கின்றன. இவையே காலநிலை மாற்றத்திற்கான உதாரணம் என்றாா்.
இதில், சீா்காழி வட்ட வனச்சரகா் அயூப்கான், நீா் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் சுபத்திரா, நீா் ஆதாரத்துறை செயற்பொறியாளா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
துறைத் தலைவா் ம.பாஸ்கரன் வரவேற்றாா். 5 அமா்வுகளாக நடைபெற்ற பயிற்சி பட்டறையில் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினாா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு

தொழிற்பணிகளுக்கு வன நிலம்: வழிகாட்டுதல்களைப் பின்பற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

அனுமதியின்றி ஆற்றுப்படுகை, அரசு புறம்போக்கு, பட்டா நிலங்களில் கனிமங்கள் எடுத்தால் குண்டா் சட்டம் பாயும்!

மேய்ச்சல் நிலம் மேய்ப்பதற்கே...
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


