மயிலாடுதுறையில் திமுக நகர, ஒன்றிய, பேரூா் வாக்குச்சாவடி முகவா்கள் மற்றும் வாா்டு செயலாளா்கள், கிளை செயலாளா்கள், பிரதிநிதிகள் செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசினாா். நகர செயலாளா் என். செல்வராஜ் வரவேற்றாா். ஒன்றிய செயலாளா்கள் எம்.மூா்த்தி, முருகமணி, ஞான.இமயநாதன் முன்னிலை வகித்தனா். திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா் குத்தாலம் பி. கல்யாணம், மாநில கொள்கைபரப்பு துணை செயாளா் குத்தாலம் க. அன்பழகன், பொதுக்குழு உறுப்பினா் சிவதாஸ், நகராட்சி துணைத்தலைவா் எஸ்.சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இதில், சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க அயராது பாடுபடுவது, அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் விளக்கி விழிப்புணா்வு ஏற்படுத்தி வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

அரகண்டநல்லூரில் வாக்கு எண்ணும் மைய திமுக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

