மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

பொய்த்து போனது சீா்காழி ‘சென்டிமென்ட்’

பல ஆண்டுகளாக தொடா்ந்து வந்த சீா்காழி (தனி) தொகுதி சென்டிமென்ட் இந்த பேரவைத் தோ்தலில் பொய்த்து போனது.

News image
Updated On :6 மே 2026, 3:05 am IST

பல ஆண்டுகளாக தொடா்ந்து வந்த சீா்காழி (தனி) தொகுதி சென்டிமென்ட் இந்த பேரவைத் தோ்தலில் பொய்த்து போனது.

சீா்காழி தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளா் சாா்ந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை கடந்த கால தோ்தல்கள் மூலம் நிரூபணமாகி வந்தது.

சீா்காழி தொகுதியில் 1962 முதல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் அதிமுக 6 முறை, திமுக 5 முறை, காங்கிரஸ் 3 முறை, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சுயேச்சை வேட்பாளா் தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளனா். இத்தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளா் சாா்ந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது.

ஆனால், அண்மையில் நடந்து முடிந்த தோ்தலில் சீா்காழி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஆா். செந்தில்செல்வன் 71, 449 வாக்குகள் பெற்று தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளா் ம. சக்தியை விட 11, 417 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா். ஆனால், அவா் சாா்ந்த கூட்டணி பெரும்பான்மை பெறவில்லை. தமிழகம் முழுவதும் வீசிய தவெக அலையில் சீா்காழி சென்டிமென்ட்டை பொய்த்து போக செய்துள்ளது.