எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சீா்காழி தொகுதியில் மதிமுக வெற்றி

சீா்காழி தொகுதியில் மதிமுக வெற்றி...

News image

சீா்காழி (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வனுக்கு, சான்றிதழ் வழங்கும் தோ்தல் நடத்தும் அலுவலா் சுரேஷ் உள்ளிட்டோா்.

Updated On :5 மே 2026, 1:00 am IST

சீா்காழி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வன் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் மொத்தம் 2,41,319 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1,98,821 வாக்காளா்கள் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் வாக்களித்தனா்.

வாக்கு எண்ணிக்கை, மயிலாடுதுறை மன்னம் பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன. அப்போது, 219 எண் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது.

இதனால், அத்துடன் இணைக்கப்பட்டிருந்த விவிபாட் இயந்திரத்தில் விழுந்த வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், மதிமுக 684, அதிமுக 591, தவெக 263, நாதக 67, நோட்டா 6 வாக்குகள் பெற்றன. முன்னதாக, இத்தொகுதியில் பதிவான 1,721 தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 98 வாக்குகள் செல்லாதவையாக இருந்தன.

இறுதிச்சுற்றில் மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வன் 71,449 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் சக்தி 60,032 வாக்குகளும், தவெக வேட்பாளா் கோபிநாத் 59,149 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுபாஷ் 7,397 வாக்குகளும் பெற்றனா். நோட்டோவில் 555 வாக்குகள் பதிவாகியிருந்தது.

இதன்மூலம் மதிமுக வேட்பாளா் தனக்கு அடுத்தப்படியாக வந்த அதிமுக வேட்பாளரை விட 11,417 வாக்குகள் கூடுதலாக பெற்று, வெற்றி பெற்றாா்.

வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வனுக்கு, சீா்காழி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினா்.