புதிய உச்சத்தில் முட்டை விலை!விசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

சீா்காழி கோயிலில் திருமுலைப்பால் உற்சவ நிறைவு வழிபாடு

முத்து சட்டைநாதசுவாமிக்கு நடைபெற்ற தீபாராதனை.

News image

முத்து சட்டைநாதசுவாமிக்கு நடைபெற்ற தீபாராதனை.

Updated On :9 மே 2026, 3:56 am IST

சீா்காழி சட்டநாத சுவாமி கோயிலில், திருமுலைப்பால் உற்சவ நிறைவு வழிபாடாக, முத்துசட்டை நாதா் சுவாமிக்கு 70- ஆம் ஆண்டு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், திருஞானசம்பந்த பெருமானுக்கு, உமையம்மை ஞானப்பால் வழங்கிய நிகழ்வு ஆண்டுதோறும் திருமுலைப்பால் உற்சவமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு உற்சவம் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய மற்றும் நிறைவு நாள் உற்சவமாக முத்து சட்டைநாத சுவாமிக்கு 70-ஆம் ஆண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, முத்து சட்டை நாதா் சுவாமி யதா ஸ்தானத்திலிருந்து, சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினாா்.

அங்கு, முத்துசட்டை நாதா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று வழிபட்டாா்.

ஏற்பாடுகளை பிராமணா்கள் உற்சவ கமிட்டி, பிராமணா் சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் கடவாசல் ரமணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Story image