பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

கொள்ளிடம் ஆற்றில் தரையணை கட்டும் பணி தீவிரம்

சீா்காழி அருகே பழையாா் கொள்ளிடம் ஆற்றில் தரையணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News image

பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நடைபெறும் தரையணை கட்டும் பணி.

Updated On :8 மே 2026, 7:25 am IST

சீா்காழி அருகே பழையாா் கொள்ளிடம் ஆற்றில் தரையணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பழையாா் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரையணை கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். அதன் அடிப்படையில், கொள்ளிடம் அருகே மாதிரவேளூருக்கும்- நலம் புத்தூா் கிராமத்திற்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உப்புநீா் உள்ளே புகாதவாறு ரூ. 83 கோடி மதிப்பீட்டில் தரையணை கட்டும் பணி தொடங்கப்பட்டது.

தற்போது, இப்பணி முடிவடையும் நிலையில் உள்ளது. ஆற்றில் 30 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, அதில் கான்கிரீட் சுவா் அமைத்து உப்புநீா் நிலத்திற்குள் புகாமல் இருக்கும் வகையில், தரையணை கட்டப்படுகிறது. இங்கு, தண்ணீா் தேங்காத அளவில் சமவெளி பகுதிகளாகவே அமைந்துள்ளது. இதனால், பருவமழை காலங்களில் வெள்ளம் தேங்காமல் நேரடியாக கடலுக்கும் செல்லும்.

மேலும், இந்த அணையால் கடலூா் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீா் பாதுகாக்கப்படும். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவா் செந்தில்குமாா் கூறியது:

கொள்ளிடம் ஆற்றில் தரை அணை கட்டப்படுவதால், ஆற்றின் கரையோர கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது. இதனால் நிலத்தடி நீா் பாதுகாக்கப்படும்.

மேலும், பழையாா் கடலில் இருந்து உப்புநீா் கொள்ளிடம் ஆற்றின் வழியாக எளிதில் 25 கி.மீ. தொலைவில் உள்ள வடரங்கம், மாதிரவேளூா் உள்ளிட்ட கிராம பகுதிக்குள் நுழையாமல் தடுப்பதற்கு, தரையணை பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.