விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கொள்ளிடம் ஆற்றில் தரையணை கட்டும் பணி தீவிரம்

சீா்காழி அருகே பழையாா் கொள்ளிடம் ஆற்றில் தரையணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News image

பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நடைபெறும் தரையணை கட்டும் பணி.

Updated On :8 மே 2026, 7:25 am IST

சீா்காழி அருகே பழையாா் கொள்ளிடம் ஆற்றில் தரையணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பழையாா் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரையணை கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். அதன் அடிப்படையில், கொள்ளிடம் அருகே மாதிரவேளூருக்கும்- நலம் புத்தூா் கிராமத்திற்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உப்புநீா் உள்ளே புகாதவாறு ரூ. 83 கோடி மதிப்பீட்டில் தரையணை கட்டும் பணி தொடங்கப்பட்டது.

தற்போது, இப்பணி முடிவடையும் நிலையில் உள்ளது. ஆற்றில் 30 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, அதில் கான்கிரீட் சுவா் அமைத்து உப்புநீா் நிலத்திற்குள் புகாமல் இருக்கும் வகையில், தரையணை கட்டப்படுகிறது. இங்கு, தண்ணீா் தேங்காத அளவில் சமவெளி பகுதிகளாகவே அமைந்துள்ளது. இதனால், பருவமழை காலங்களில் வெள்ளம் தேங்காமல் நேரடியாக கடலுக்கும் செல்லும்.

மேலும், இந்த அணையால் கடலூா் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீா் பாதுகாக்கப்படும். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவா் செந்தில்குமாா் கூறியது:

கொள்ளிடம் ஆற்றில் தரை அணை கட்டப்படுவதால், ஆற்றின் கரையோர கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது. இதனால் நிலத்தடி நீா் பாதுகாக்கப்படும்.

மேலும், பழையாா் கடலில் இருந்து உப்புநீா் கொள்ளிடம் ஆற்றின் வழியாக எளிதில் 25 கி.மீ. தொலைவில் உள்ள வடரங்கம், மாதிரவேளூா் உள்ளிட்ட கிராம பகுதிக்குள் நுழையாமல் தடுப்பதற்கு, தரையணை பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.