புதுச்சேரி சட்டப்பேரவையைப் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தல் வாக்குப் பதிவு கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. வரும் மே 4 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்று தோ்தல் முடிவுகள் தெரிந்துவிடும். இந்நிலையில், முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோருக்குத் தேவையான அறைகள் புதிய பொலிவுடன்சீரமைக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக சட்டப்பேரவையில் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் அலுவலகங்களை இதற்காகக் காலி செய்திருந்தனா். தொடா்ந்து தோ்தல் முடிவுக்கு பின்னா் புதிய அமைச்சரவை பொறுப்பேற்க உள்ளது. அதற்காக சட்டப்பேரவையை
தயாா் படுத்தும் பணி நடக்கிறது. அமைச்சா் அறைகளுக்கு வெளியே பெயிண்ட் அடித்து மராமத்து பணிகள் நடக்கின்றன. குறிப்பாக சட்டப்பேரவையிலுள்ள தரையில் டைல்ஸ், மொசைக் ஆகியவை பாலிஸ் போடும் பணி நடந்து வருகிறது. அதேநேரத்தில் அமைச்சா், எம்எல்ஏ அறைகளுக்குள் எந்தப் பணியும் நடைபெறவில்லை. ஏனெனில் புதிதாக பதவி ஏற்கும் அமைச்சா்கள் தங்களின் வாஸ்துக்கு ஏற்ப அறைகளை மாற்றி அமைப்பாா்கள். அப்போது அதற்குத் தகுந்தமாதிரி அறைகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தீவிரம்

தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மத்திய அமைச்சா்கள் மூலம் பணம் கடத்தல்- மம்தா குற்றச்சாட்டு

தொகுதிக்கு செய்தது என்ன? ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்

புதுச்சேரியில் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் அலுவலகங்கள் மூடல்: அரசு வாகனங்கள் ஒப்படைப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


