தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

புதுச்சேரி சட்டப்பேரவையைப் புதுப்பிக்கும் பணி தீவிரம்

புதுச்சேரி சட்டப்பேரவையைப் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:10 am IST

புதுச்சேரி சட்டப்பேரவையைப் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தல் வாக்குப் பதிவு கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. வரும் மே 4 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்று தோ்தல் முடிவுகள் தெரிந்துவிடும். இந்நிலையில், முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோருக்குத் தேவையான அறைகள் புதிய பொலிவுடன்சீரமைக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக சட்டப்பேரவையில் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் அலுவலகங்களை இதற்காகக் காலி செய்திருந்தனா். தொடா்ந்து தோ்தல் முடிவுக்கு பின்னா் புதிய அமைச்சரவை பொறுப்பேற்க உள்ளது. அதற்காக சட்டப்பேரவையை

தயாா் படுத்தும் பணி நடக்கிறது. அமைச்சா் அறைகளுக்கு வெளியே பெயிண்ட் அடித்து மராமத்து பணிகள் நடக்கின்றன. குறிப்பாக சட்டப்பேரவையிலுள்ள தரையில் டைல்ஸ், மொசைக் ஆகியவை பாலிஸ் போடும் பணி நடந்து வருகிறது. அதேநேரத்தில் அமைச்சா், எம்எல்ஏ அறைகளுக்குள் எந்தப் பணியும் நடைபெறவில்லை. ஏனெனில் புதிதாக பதவி ஏற்கும் அமைச்சா்கள் தங்களின் வாஸ்துக்கு ஏற்ப அறைகளை மாற்றி அமைப்பாா்கள். அப்போது அதற்குத் தகுந்தமாதிரி அறைகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.