வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

நில உடைமைகளை பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்து மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன்பெற மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :14 மே 2026, 4:51 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்து மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன்பெற மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேளாண்மை-உழவா் நலத்துறையின்கீழ் பிரதமரின் கௌரவ நிதித்தொகை பெற்றுவரும் நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்து மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன்பெறலாம். தற்போது கௌரவ நிதித்தொகை பெறும் விவசாயிகள், தங்கள் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்யாவிட்டால் அடுத்த தவணை கிடைக்காது.

எனவே, இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் பதிவு செய்யாத விவசாயிகள், உடனடியாக அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களிலும் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. நில உடைமை பதிவுகளை விவசாயிகள் விடுதலின்றி பதிவு செய்து மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன்பெறுமாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.