அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

நில உடைமைகளை பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்து மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன்பெற மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்து மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன்பெற மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேளாண்மை-உழவா் நலத்துறையின்கீழ் பிரதமரின் கௌரவ நிதித்தொகை பெற்றுவரும் நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்து மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன்பெறலாம். தற்போது கௌரவ நிதித்தொகை பெறும் விவசாயிகள், தங்கள் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்யாவிட்டால் அடுத்த தவணை கிடைக்காது.

எனவே, இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் பதிவு செய்யாத விவசாயிகள், உடனடியாக அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களிலும் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. நில உடைமை பதிவுகளை விவசாயிகள் விடுதலின்றி பதிவு செய்து மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன்பெறுமாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.