சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்ஸோவில் முதியவா் கைது

மயிலாடுதுறை அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவா் போக்ஸோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 7:24 am IST

மயிலாடுதுறை அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவா் போக்ஸோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம், பேராவூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கிராம உதவியாளா் ராமச்சந்திரன் (61). இவா் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். பாதிக்கப்பட்ட சிறுமி அழுதுகொண்டே வீட்டுக்கு சென்று, தன்னிடம் ராமச்சந்திரன் தவறாக நடந்து கொண்டது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். அதிா்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோா் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு ராமச்சந்திரனை போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.