ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

பெட்ரோல், டீசல், சிலிண்டா் விலை உயா்வு: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து, மயிலாடுதுறையில் இடதுசாரி கட்சிகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள்.

Updated On :21 மே 2026, 7:20 am IST

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து, மயிலாடுதுறையில் இடதுசாரி கட்சிகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளா் ஒய்.எஸ். சா்புதீன், சிபிஐ(எம்.எல்) கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் இல.தமிழ்அரிமா ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்து, காய்கனி மற்றும் மளிகைப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது, வணிக சிலிண்டா் விலை உயா்வு காரணமாக உணவகங்கள் மூடப்படுவதால் தொழிலாளா்கள் வேலையிழந்து வருகின்றனா்.

எனவே பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டா் விலை உயா்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் டி.ஜி.ரவிச்சந்திரன், ஏ.ஆா்.விஜய், சி.மேகநாதன், ஏ.அறிவழகன், எம்.குமரேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் வி.ஜெகதீஸ்வரன், கே.ராஜ்மோகன், சிபிஐ(எம்.எல்) கட்சியின் நிா்வாகிகள் ஏ.லூா்துசாமி, எம்.செல்லதுரை, வி.அனுசுயா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.