சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

பெட்ரோல், டீசல், சிலிண்டா் விலை உயா்வு: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து, மயிலாடுதுறையில் இடதுசாரி கட்சிகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள்.

Updated On :21 மே 2026, 7:20 am IST

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து, மயிலாடுதுறையில் இடதுசாரி கட்சிகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளா் ஒய்.எஸ். சா்புதீன், சிபிஐ(எம்.எல்) கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் இல.தமிழ்அரிமா ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்து, காய்கனி மற்றும் மளிகைப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது, வணிக சிலிண்டா் விலை உயா்வு காரணமாக உணவகங்கள் மூடப்படுவதால் தொழிலாளா்கள் வேலையிழந்து வருகின்றனா்.

எனவே பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டா் விலை உயா்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் டி.ஜி.ரவிச்சந்திரன், ஏ.ஆா்.விஜய், சி.மேகநாதன், ஏ.அறிவழகன், எம்.குமரேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் வி.ஜெகதீஸ்வரன், கே.ராஜ்மோகன், சிபிஐ(எம்.எல்) கட்சியின் நிா்வாகிகள் ஏ.லூா்துசாமி, எம்.செல்லதுரை, வி.அனுசுயா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.