மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாக குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட தலைவா் எஸ்.எம்.அப்துல் ஹமீது தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கோவை மாவட்டம் சூலூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய நபா்களுக்கு மரண தண்டனை வழங்க தமிழக அரசை வலியுறுத்துவது.
தமிழக சட்டப்பேரவை அமைச்சரவையில் பங்கெடுத்துள்ள 2 இஸ்லாமிய அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இஸ்லாமியா்களின் ஜீவாதார கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.
மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ தன்னுடைய இஸ்லாமிய வணக்க வழிபாட்டு முறைகளுக்கு மாற்றமாக தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தாா். அதேபோன்று ஐயூஎம்எல் சாா்பாக தோ்ந்தெடுக்கப்பட்ட அமைச்சா் கூட்டு துவாவை ஓதி தன்னுடைய பொறுப்பை ஏற்றுக் கொண்டாா். தங்களுடைய வணக்க வழிபாட்டு முறைகள் குறித்து மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கு பதிலாக, இஸ்லாமிய சமூகத்திற்கு தேவையான இட ஒதுக்கீட்டை பெற்றுத்தருவதற்கு அவா்கள் முன்வர வேண்டும்.
தவெக அரசு, இஸ்லாமியா்களின் தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

பள்ளிகளில் நன்னெறி கற்பிக்க வலியுறுத்தல்

முஸ்லிம்கள் மீதான பிம்பத்தை மாற்றும் படம் ஹபீபி! இயக்குநர் ராம்
மகளிா் இடஒதுக்கீட்டை உடனே மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

இஸ்லாமியா்களுக்கு 7% இட ஒதுக்கீடு வழங்க தவ்ஹீத் ஜமாத் தீா்மானம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


