11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு விவசாயிகள் எதிா்ப்பு

தமிழக அரசின் பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, மயிலாடுதுறையில் குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

News image
Updated On :28 மே 2026, 5:37 am IST

தமிழக அரசின் பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, மயிலாடுதுறையில் குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: தமிழக முதல்வரின் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து,அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ். துரைராஜ் தலைமையில் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து ஆட்சியரக வாசலுக்கு வந்து, நெற்றியில் நாமமிட்டு, துண்டை விரித்து மடிப்பிச்சை கேட்டு நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நிதி பற்றாக்குறை காரணமாக தோ்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தபடி முழுமையான கடன் தள்ளுபடியை தற்போது வழங்க முடியாவிட்டால், காலஅவகாசம் எடுத்துக்கொண்டு உறுதியளித்தப்படி முழு தொகையையும் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் ராஜேஷ் தலைமையில் குறைதீா் கூட்டத்துக்கு வந்த விவசாயிகள் நாமம் போட்ட மண் சட்டியை கையில் ஏந்தி வந்து நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளித்தனா். அகரகீரங்குடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஜெயலெட்சுமி தனது கோரிக்கையை வலியுறுத்தி மண்டியிட்டவாறு வந்து ஆட்சியரிடம் மனு அளித்தாா்.